Wednesday, August 8, 2012


‘பிட்’ டான உடலுக்கு பிரௌன் பிரட்!!!

தற்போதுள்ள மக்கள் பிரட் வாங்கும் போது வெள்ளை பிரட்டை விட பிரௌன் பிரட்டையே வாங்குகிறார்கள். ஏனெனில் தற்போது அனைவருக்கும் உடல் நலத்தில் அதிக அக்கரை வந்துவிட்டது. ஆகவே அனைவரும் ஆரோக்கியமாக வாழ உணவுப் பொருட்களை பார்த்து பார்த்து வாங்குகிறார்கள். அதிலும் பிரௌன் பிரட்டானது கம்பு அல்லது கோதுமையால் ஆனது. மேலும் அதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார் சத்துக்கள் இருக்கின்றன.

ஆகவே இது ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள். அதிலும் இந்த பிரௌன் பிரட்டை வாங்கும் போது நன்கு தரமானதாக உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் சில பிரௌன் பிரட்கள் செயற்கை வண்ணங்களாலும் பிரௌனாக நிறமூட்டப்பட்டிருக்கும். சரி, இப்போது அந்த பிரௌன் பிரட்டை சாப்பிட்டால் அப்படி என்ன உடலுக்கு ஆரோக்கியம் என்று பார்ப்போமா!!!
முழு தானியங்கள் : பிரௌன் பிரட்டை செய்யப் பயன்படுத்தப்படும் தானியங்கள் சுத்தகரிக்கப்படாதது என்பதால் அது பிரௌன் நிறத்தில் உள்ளது. மேலும் அதில் அதிகமான அளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு, அதை செய்யப் பயன்படுத்தப்படும் தானியத்தில் இருக்கும் எந்த ஒரு பகுதியையும் நீக்காமல் தயாரிப்பதால், இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தைத் தரும். மேலும் அதில் வைட்டமின் ஈ மற்றும் உடலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்களும் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இதனை உண்டால் செரிமானமும் எளிதாக நடைபெறும்.

மேலும் இது டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்த உணவுப் பொருள். அதனால் உடலானது ஸ்லிம் ஆவதோடு, உடலுக்கு தேவையான அளவு மட்டும் கொழுப்புகளும் கிடைக்கும். ஆகவே ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருக்க, இதனை சாப்பிடலாம்.
ஊட்டச்சத்துக்கள் : சாதாரண பிரட்டில் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஊட்டச்சத்துக்களை நிரப்புகின்றனர். ஆனால் அப்போது நார்ச்சத்துக்களை சேர்க்க முடியாது. ஆனால் இந்த பிரௌன் பிரட்டில் அதிக அளவு நார் சத்துக்கள் இருக்கின்றன. ஆகவே போதிய அளவு பிரேளன் பிரட் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பதோடு, வயிற்றுக்கும் போதிய உணவு கிடைத்த நிம்மதியும் இருக்கும். மேலும் இது பசியையும் கட்டுப்படுத்தும். அதோடு இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் பராமரித்து வரும். அதுமட்டுமல்லாமல் இதனை உண்பதால் மாரடைப்பு ஏற்படுவதும் குறையும் என்றும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலம் இந்த பிரௌன் பிரட் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவையும் குறைத்து, உடலை நன்கு பிட்டாக வைத்துக் கொள்ளும்.
பிரௌன் பிரட்டானது எந்த ஒரு சந்தேகமும் இல்லாத ஆரோக்கியமான உணவுப் பொருள். ஆனால் அதனை உண்ணும் போது அளவுக்க அதிகமாகவும் உண்ணக் கூடாது. ஏனென்றால் அதில் கார்போஹைட்ரேட் உள்ளது. ஆகவே குறைந்த அளவு உண்டால் ஆரோக்கியமாக, பிட்டாக இருக்கலாம். பிரௌன் பிரட் வெள்ளை பிரட்டை விட சுவையானது அல்ல தான், ஆனால் ஆரோக்கியமானது.

கூந்தல் வறட்சியைப் போக்க இயற்கை வழிகள்…


பெண்கள் அனைவரின் மனதிலும் நீளமான, அடர்த்தியான, பட்டு போன்று கூந்தல் இருக்க வேண்டும என்று நினைப்பார். ஆனால் அவ்வாறு நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான முறையான பராமரிப்பு இருக்க வேண்டும். ஆகவே அத்தகைய பராமரிப்பிற்கு அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டில் இருந்தே ஈஸியாக எந்த ஒரு பக்க விளைவு மற்றும் வறட்சி இல்லாமல், கூந்தலை பட்டுப் போன்று மாற்ற முடியும். அது எப்படியென்று தெரிந்து கொள்ளுங்களேன்…
கூந்தல் வறட்சியைப் போக்க…
1. வறட்சியான கூந்தலுக்கு முட்டை மற்றும் தயிர் மிகவும் சிறந்த பொருட்களாகும். அதற்கு முட்டையின் வெள்ளைக் கருவுடன் 5 ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் மூல்தானி மெட்டி ஆகியவற்றை நன்கு கலந்து முடிகள் மற்றும் முடிகளின் மயிர்கால்களில் நன்கு படும்படி தடவ வேண்டும். பின் அது நன்கு காய்ந்ததும், மைல்டு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு குளிக்க வேண்டும். அதனால் முடியானது மென்மையாவதோடு, சுத்தமாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல் அது ஒரு சிறந்த ஹேர் ஸ்ட்ரெய்ட்னரும் கூட.
2. ஒரு கப் மயோனைஸ் எடுத்துக் கொண்டு, அதனை எண்ணெய் ஆகும் வரை சூடுபடுத்தவும். பின் அந்த எண்ணெயை தலை முடிக்கு தடவி, பிளாஸ்டிக் கவரால் கட்டிக் கொள்ள வேண்டும். பின் 15 நிமிடம் கழித்து, ஷாம்பு போட்டு நன்கு அலச வேண்டும்.
3. ஒரு ஸ்பூன் சீகைக்காய் பவுடரை ஒரு கப் தேங்காய் பாலுடன் கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை கூந்தலுக்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால் கூந்தலானது வறட்சி இல்லாமல், மென்மையாகவும், பளபளப்போடும் மின்னும்.
4. வாழைப்பழம் ஒன்றை நன்கு பிசைந்துக் கொள்ளவும், பின் அதோடு ஒரு கப் தயிரை சேர்த்து கலந்து கொள்ளவும். அந்த கலவையை கூந்தலுக்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசி குளிக்க வேண்டும். இதனால் கூந்தலுக்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
5. தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, அதை கூச்தலின் மயிர்கால்களில் தடவி, நன்கு மசாஜ் செய்ய வேண்டும். அதனால் தலையில் இருக்கும் பொடுகு போவதோடு, வறண்ட கூந்தலும் மென்மையை அடையும்.
அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியமான கூந்தலைப் பெற, பயணம் செய்யும் போது, கூந்தலை நன்கு துணியால் மூடிக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு நாள் விட்டு கூந்தலை நீரில் அலச வேண்டும் மற்றும் படுக்கும் முன் நன்கு கூந்தலை நன்கு சீவிக் கொண்டு படுக்க வேண்டும். இவற்றாலும் கூந்தலானது நன்கு ஆரோக்கியத்துடனும், வறட்சி இல்லாமலும் இருக்கும்.

கர்ப்பிணிகள் காபி குடிப்பது கருவுக்கு ஆபத்து–ஆய்வில் தகவல்

கர்ப்பிணிகள் தெருவோர கடைகளில் காபி பருகுவதை தவிர்க்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக அளவில் காஃபின் கரு குழந்தையை பாதிப்பதோடு கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம் எனவேதான் தெருவோர கடைகளில் காபி பருகுவதை தவிர்க்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இரண்டு கப் காபி
அதேபோல் கர்ப்பமாக உள்ள பெண்கள் அதிகமாக காபி அருந்தினால் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கும் என்று இங்கிலாந்தில் உள்ள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே வீட்டில் தயாரிக்கப்பட்ட காபியாகவே இருந்தாலும் நாளொன்றுக்கு 2 சிறிய கப் காபி பருகுவதில் தவறில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ், லெய்செஸ்டர் பல்கலைக் கழகங்கள் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டனர். சுமார் 2,500 கருவுற்ற பெண்களிடம் வினாத்தாள்கள் கொடுத்து பதிலளிக்குமாறு செய்தனர். இதில் அவர்கள் நாளொன்றுக்கு அருந்தும் காபியின் அளவு பற்றி விவரம் கோரப்பட்டது.
இதன்படி நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி அருந்தும் கருத்தரித்த பெண்கள், எடை குறைவான குழந்தைகளை பெற்றெடுப்பதாக தெரிவித்துள்ளதோடு, பின்னால் இந்த குழந்தைகள் வளரும்போது சிக்கல்கள் ஏற்படுவதாகவும், சில குழந்தைகள் விரைவில் இறந்து போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவின் விபரங்கள் ” இங்கிலாந்து மருத்துவ இதழில் வெளியிடப்பட உள்ளது.
கருச்சிதைவு அபாயம்
சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவும் கருவுற்ற பெண்கள் நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி எடுத்துக் கொண்டால் ஏற்படும் பாதிப்பினை வெளியிட்டிருந்தது கருத்தரித்த முதல் 12 வாரங்களுக்கு பெண்கள் காஃபைனிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஏனெனில் இந்த காலக்கட்டங்களில்தான் கருச்சிதைவு சாத்தியங்கள் அதிகம் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குட்டீஸ்களை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன கொடுக்கலாம்?


காலையில் பள்ளிக்கு செல்லும் அவசரத்தில் அள்ளிவிழுங்கி விட்டு ஓடும் குழந்தைகள் மதிய உணவுக்கு எதையாவது டப்பாவில் அடைத்துக்கொண்டு போய் ஆறிப்போன உணவுகளை விருப்பமில்லாமல் சாப்பிட்டு வருகின்றனர். மாலையில் விளையாடும் ஆர்வத்தில் சரியாக சாப்பிடுவதில்லை. மேலும் இன்றைய குழந்தைகளுக்கு பீட்ஸாவும், பர்கரும், கார்பனேட் அடங்கிய குளிர்பானங்களும் வழங்கப்படுகின்றன. இதனால் சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் பெரும்பாலான குழந்தைகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். குழந்தைகளுக்கு வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கிய உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது குழந்தைகள் நல மருத்துவர்களின் அறிவுரையாகும்.
வைட்டமின்கள் அவசியம்
வைட்டமின் சத்து குறைபாடினால் குழந்தைகள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக வைட்டமின் ஏ குறைபாடினால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது. எனவே வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள பச்சைக் காய்கறிகள், கேரட், மாம்பழம், பப்பாளி, மீன், ஈரல், முட்டையின் மஞ்சள் கரு, முருங்கைக்காய் போன்றவற்றை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கவேண்டும்.
வைட்டமின் பி 
குழந்தைகளுக்கு ஏற்படும் தோல், நரம்பு மண்டல பிரச்சினைகளை போக்க வைட்டமின் பி சத்து அவசியம். வைட்டமின் பி1, பி2, பி3, மேலும் பி6 போன்றவை அதிகம் உள்ள தானியங்கள், பச்சைக் காய்கறிகளை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டும்.
வைட்டமின் சி 
வைட்டமின் சி சத்து குழந்தைகளுக்கு ஏற்படும் காயங்களை ஆற்ற உதவுகிறது. இது தோலின் நலத்திற்கும், ஸ்கர்வி என்ற நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. ஆரஞ்சு, நெல்லிக்காய், திராட்சை, கொய்யா போன்ற உணவுப் பொருட்களில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. எனவே இதுபோன்ற பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
வைட்டமின் டி
குழந்தைகளுக்கு கால்சியம் சத்து கிடைக்கச் செய்வதில் வைட்டமின் டி சத்துக்கு முக்கிய பங்கு உண்டு. இது எலும்புகள் மற்றும் பற்களில் குறைபாடு ஏற்படுவதை தடுக்கிறது. இந்த வைட்டமின்கள் முட்டையின் மஞ்சள் கருவில் காணப்படுகின்றன. சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. எனவே குழந்தைகளின் உடம்பில் சூரிய ஒளி படச்செய்வதின் மூலமும் அவர்களுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்கும்.
இரும்பு சத்து, தாது உப்புகள்
குழந்தைகளின் வளர்ச்சிக்கு இரும்புச்சத்தும், தாது உப்புகளும் அவசியமாகும். இரும்புச்சத்தும், போலிக் அமிலமும் ரத்த சோகையை தடுக்க உதவும். எனவே தானியங்கள், பச்சை காய்கறிகள், இறைச்சி, முட்டை பால், ஈரல் போன்றவற்றை அதிகம் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.
கால்சியம், பாஸ்பரஸ்
கால்சியமும், பாஸ்பரசும் உறுதியான பற்களுக்கும், எலும்புகளுக்கும் தேவையானதாகும். எனவே பால், பால் உணவுப் பொருட்களில் அதிகம் காணப்படுகிறது. தக்காளியில் கால்சியமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுகிறது.
அயோடின், துத்தநாகம்
அயோடின் தாது உப்பு குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு ஏற்றது. அதேபோல் ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு ஏற்றது. இந்த சத்துக்கள் பால், மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது. எனவே இந்த வகை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பது குழந்தை நல மருகள்த்துவர்களின் அறிவுரையாகும்

சுருக்கமில்லாத முகத்திற்கு காய்கறி, பழச்சாறு பூசுங்க !


இளமையோடும், அழகுடனும் இருக்கவேண்டும் என்பதே அனைத்து தரப்பு பெண்களின் எண்ணம். கண்களுக்கு கீழே கருவளையமோ, முகத்தில் லேசாக சுருக்கமோ ஏற்பட்டாலோ உடனே அழகு நிலையங்களுக்குச் சென்று ஆயிரக்கணக்கில் செலவழித்து முகத்தை அழகு படுத்திக்கொள்பவர்கள் இருக்கின்றனர். ரசாயனங்கள் நிறைந்த அந்த பொருட்களை பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படுவது வாடிக்கை. ஆனால் பணம் அதிகம் செலவு செய்யாமல் அன்றாடம் சமையலுக்கு வாங்கும் பொருட்களை வைத்தே அழகு படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். இதனால் செலவும் மிச்சமாகும் காலி ஃப்ளவர், முள்ளங்கி வெயிலில் அலைவதால் முகம் கருப்பாகிவிடும். அழுக்குகள் படிந்து முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். இவற்றைப் போக்க காலிஃப்ளவரும், முள்ளங்கியும் போதும். 2 ஸ்பூன் பாலுடன் ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் முழுவதும் பூசி 10 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் புத்துணர்ச்சியோடு திகழும். இதை தொடர்ந்து செய்து வர முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். காரட், ஆரஞ்சு பழம்
தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன், காரட்சாறு ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர் ருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன் ஆகியவற்றை எடுத்து நன்றாக கலக்கவும். அந்த கலவையை நன்றாக முகம் முழுவதும் பூசி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளப்பளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
மென்மை தரும் வெள்ளரி
வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றாக மை போல அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணெய் வழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும். முகம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்.
ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.
சுருக்கம் நீக்கும் கோஸ்
முட்டைக் கோஸ் இலைகளை நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு ஈஸ்ட், ஒரு ஸ்பூன் கலந்து பேஸ்ட் போல செய்யவும். அதனை முகத்தில் தடவி பேக் போடவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
இதன் பின்னர் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை துடைத்து விட்டு வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும். ஒருமணி நேரம் இந்த கலவை முகத்தில் இருக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தை கழுவி விட வேண்டும். வாரம் ஒருமுறை இதுபோல செய்து வர முகம் சுருக்கம் நீங்கி பளபளப்பாகும். பருக்கள் இருந்தாலும் மறையும்.
சத்தான சாத்துக்குடி
சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.
ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பால், பப்பாளி
பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

இளமையை மீட்டுத்தரும் கடலைமாவு மாஸ்க்!

கோடை வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குன்றிவிடும். இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களே போதுமானது. கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
கடலைமாவு, மஞ்சள் பூச்சு
இந்தியாவில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பொருட்கள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும். சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல செய்து முகத்தில் பூசி உலர வைக்கவும். அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். சருமம் மென்மையாகும்.
கடலைமாவு பேஷியல்
கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். அதனை முகத்தில் நன்றாக பேக் போட்டு ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளிச் என்று ஆகும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.
பால், பன்னீர் கடலைமாவு
இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை நன்றாக முகத்தில் பூசவும், சருமம் கருப்பாக உள்ள இடங்களிலும் இந்த கலவையை பூசி ஊறவைக்கவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.
தயிர், எலுமிச்சை, கடலைமாவு
சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும். ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். சில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் தேவையற்ற எண்ணெய் பசை காணாமல் போவதோடு முகம் புத்துணர்ச்சியாகும்.
டல் முகம் பொலிவாக
தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு “பேக்” போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.
பருக்கள் நீங்க
கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் “பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ்வேண்டும். பருக்கள் இருந்த படிப்படியாக மறைந்து போகும்.

முதுகு வலி உயிர்போகுதா? உடற்பயிற்சி செய்யுங்க !

முதுகு வலி என்பது இன்றைக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தலையாய பிரச்சினையாக உள்ளது. இதற்கு காரணம் பள்ளி குழந்தைகள் பொதி சுமப்பதும், இளைய தலைமுறையினர் ஒரே இடத்தில் அமர்ந்து கம்யூட்டர் முன்பு வேலை பார்ப்பதும்தான் என்கின்றனர் மருத்துவர்கள். முதுகுவலிக்கான காரணங்கள் குறித்தும் அதற்கான தீர்வுகளையும் தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.
தண்டுவட நரம்புகள் பாதிப்பு
முதுகெலும்புகளுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பான நிலையில் உள்ள தண்டுவட நரம்புகள்தான் உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கடத்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்கின்றன. முதுகெலும்புகளுக்கு மத்தியில் உள்ள டிஸ்க் நகர்ந்து இந்த நரம்புகள் நசுக்கப்படும்போது தாங்க முடியாத வலி ஏற்படும்.
வேலை நிமித்தமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தே இருக்கக்கூடிய சூழல், தினமும் இரு சக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணித்தல், உடல் எடை கூடுதல், கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்திருத்தல் போன்ற செய்கைகளால், உடல் தசைகள் பலவீனம் அடைவதோடு, முதுகெலும்புகளில் உள்ள ‘டிஸ்க்’ அமைப்புகளிலும் அதீத அழுத்தமும் தேய்மானமும் ஏற்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த முதுகெலும்பு அமைப்பும் சீர்குலைவதோடு, தண்டுவட நரம்புகளும் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. தவிர, எலும்புகளில் ஏற்படும் சத்துக் குறைவுப் பாதிப்புகளாலும் முதுகு வலி ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.
வைட்டமின் டி சத்து
நகரச் சூழலில் இருப்பவர்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடப்பதால், உடலில் வெயில் படுவதே அபூர்வமாகிவிட்டது. வெயிலில் கிடைக்கும் ‘வைட்டமின் டி’ எலும்புகளுக்குக் கிடைக்காமல் போவதாலும் எலும்புகள் மிருதுத்தன்மை அடைந்து எளிதில் தேய்மானமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, தினமும் அரை மணி நேரமாவது உடலில் வெயில் படும்படியாகச் சூழ்நிலைகளை மாற்றிக்கொள்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
உடற்பயிற்சி அவசியம்
நாம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே நமது எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து இருக்கிறது. கால்சியத்தை எலும்பு கிரகிக்கவும், முதுகு வலிக்கு முடிவு கட்டவும் ஒரே வழி உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யும்போதுதான், எலும்புகள் தங்களுக்குத் தேவையான கால்சியத்தை உறிஞ்சும். எனவே நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் போன்ற எலும்பு மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய ஏரோபிக்ஸ் (Aerobics Exercise) வகை உடற்பயிற்சிகள் நல்லது. இவை தவிர, உடலின் வளைவுத்தன்மைக்கு உதவும் யோகாவும் எலும்பின் ஆரோக்கியத்தைக் காக்க வல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
வெள்ளைப்பூண்டு தைலம்
வெள்ளைப்பூண்டு தைலத்தை எடுத்து முதுகுவலி உள்ள இடத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். முதுகுவலி குணமாகும். வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து பருக முதுகுவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
வைட்டமின் சி பற்றாக்குறை
வைட்டமின் சி பற்றாக்குறையினாலும் முதுகுவலி ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே அன்றாட உணவில் வைட்டமின் சி சத்துள்ள பொருட்களை சேர்த்துக்கொள்ளுமாறு உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஒரே மாதிரி உட்காராதீங்க
வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு துண்டை நனைத்து அதனை முதுகு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் முதுகுவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
அனைத்தையும் விட ஒரே பொசிசனில் அதிக நேரம் அமர்ந்திருக்க வேண்டாம். அவ்வப்போது எழுந்து நடந்தாலே முதுகுவலிக்கு காரணமான தசை அழுத்தம் ஏற்படாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்